கூட்டணி அமைத்ததில் வெற்றி; ஆனால், தொகுதியில் 'தோல்வி' - 'கை'கூடாத செல்வப்பெருந்தகை வெற்றி

May 04, 2026 - 21:31
0
கூட்டணி அமைத்ததில் வெற்றி; ஆனால், தொகுதியில் 'தோல்வி' - 'கை'கூடாத செல்வப்பெருந்தகை வெற்றி

காஞ்சிபுரத்தின் தனித் தொகுதியான ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

திமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவே, ஓடியோடி உழைத்தது இவர்தான்.

ஶ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக அதிமுக களத்தில் நிறுத்திய நபர் பழனி. இவருக்கு அந்தத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதது மிகப்பெரிய மைனஸ். அதனால், பழனி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஶ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை என்று எடுத்துக்கொண்டால், மக்களுக்கு இவர் மீது 'பெரிய உடன்பாடு' இல்லை.

செல்வப்பெருந்தகையின் வெற்றிக்கு கூட்டணி 'கை'கள் பாடுபட்டாலும், எதுவும் 'கை'கூடவில்லை.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் பெரும்பான்மையாக பட்டியல் சமூக வாக்குகள் உள்ளன. அந்த வாக்குகளை கணிசமாக தவெகவின் வேட்பாளர் தென்னரசு அறுவடை செய்துவிட்டார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை அமைத்ததில் வெற்றியைத் தழுவிய செல்வப்பெருந்தகை, தனது தொகுதியில் வெற்றி பெறவில்லை.

மூன்றாவது முறையாக ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகைக்கு தோல்வி கிடைக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User