இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

Mar 11, 2026 - 16:02
 0
இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இதில் வீடு அல்லது மனைப் பத்திரப்பதிவில் மத்திய அரசு விதிகளைச் சற்று எளிதாக்கி உள்ளது.

இதுவரை, வீடு அல்லது மனையை ரூ.10 லட்சத்திற்கு மேல் வாங்கி, பத்திரப்பதிவு செய்தால் விற்பவர் மற்றும் வாங்குபவர்கள் தங்களது பான் கார்டு தகவலை வழங்க வேண்டும்.

ஆனால், வரும் 1-ம் தேதிக்குப் பின், ரூ.20 லட்சத்திற்கு மேல் வீடு அல்லது மனை வாங்கினால் தான் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.

பான் கார்டு
பான் கார்டு

இது சின்ன சின்ன ரியல் எஸ்டேட் விற்பனைகளை எளிதாக்கவும், ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

மேலும், முன்பு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட போது இருந்த நிலத்தின் மதிப்பு வேறு, இப்போது இருக்கும் மதிப்பு வேறு. அதனால், அதற்கேற்பவும் இந்த மாறுதல் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பான் கார்டு சமர்ப்பிக்கும்போது, இன்னும் சில வேலைகள் அதிகரிக்கும். ஆனால், இப்போது அது குறையும். இது பத்திரப்பதிவுகளை வேகமாக்கும் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இது எளிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0