Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" - ஹன்சிகா ஓபன் டாக்
நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.
பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2024-ம் ஆண்டு ஜூலை முதல் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் விவாகரத்து பெற்றனர். 
விவாகரத்தில் ஹன்சிகா எவ்வித ஜீவனாம்சமும் கோரவில்லை. சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், தனது விவாகரத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
அதில் அவர், "என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நான் ஒரு திரைப்பட நடிகை என்பதால் மக்கள் என்னைப் பற்றிப் பேசலாம். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு.
கடந்த இரண்டு ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலமாக இருந்தது. 
அந்தச் சமயத்தில் எனது தாய் மோனா மோத்வானி மற்றும் சகோதரர் பிரசாந்த் மோத்வானி ஆகியோர்தான் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தனர்.
மன அழுத்தத்திலிருந்து மீள அவர்கள் எனக்கு பக்கபலமாக நின்றனர். இப்போது நான் அந்தத் துயரங்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தவறான உறவில் இருந்து துன்பப்படுவதை விட, அதிலிருந்து வெளியேறுவதே நல்லது. வேலையில் கவனம் செலுத்துவதே எனக்கு இப்போதைய முக்கியக் குறிக்கோள்" எனக் கூறியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0