முருகன் சென்டிமென்ட் டு வன்னியர் வாக்குகள் - திருப்போரூரில் தவறிய பாமக கணக்கு... தோல்வியடைந்த பாலு!

May 04, 2026 - 21:31
0
முருகன் சென்டிமென்ட் டு வன்னியர் வாக்குகள் - திருப்போரூரில் தவறிய பாமக கணக்கு... தோல்வியடைந்த பாலு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தோல்வியை தழுவியுள்ளார் பாமக-வின் வழக்கறிஞர் பாலு.

இந்தத் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விஜயராஜ்.

இந்தத் தொகுதியில் பாலுவிற்கு டஃப் போட்டியாக கருதப்பட்ட வி.சி.கவின் பன்னீர்தாஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

திருப்போரூர் முருகன் கோயிலுக்கும், அன்புமணிக்கும் தனி சென்டிமென்ட் உண்டு. அதையொட்டியே தனது வழக்கறிஞரை அந்தத் தொகுதியில் களமிறக்கினார் பாமக தலைவர் அன்புமணி.

எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உடன் கே.பாலு
எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உடன் கே.பாலு

சென்டிமென்டையும் தாண்டி, திருப்போரூரில் கணிசமான வன்னியர் வாக்குகளும் உண்டு. அதை நம்பியும் அங்கே களமிறங்கினார் பாலு.

ஆனால், தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு இனி சமூக வாக்குகள் மட்டும் போதாது என்பதை பாலுவின் சறுக்கல் உறுதி செய்துள்ளது.

இந்தத் தொகுதியில் வெற்றி பெற பன்னீர்தாஸ் தீவிரமாகக் களமாடியும் இந்தத் தொகுதியை தவெக-வே தட்டிச் சென்றுள்ளது.

கே.பாலு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 67,392 வாக்குகள் ஆகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User