EFGH Strategy: பங்குச்சந்தையில் நீங்க வெற்றி பெற உதவும் ஃபார்முலா இது!

Jun 12, 2026 - 19:01
0
EFGH Strategy: பங்குச்சந்தையில் நீங்க வெற்றி பெற உதவும் ஃபார்முலா இது!

பங்குச்சந்தை என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல. உணர்வு சார்ந்ததும் கூட.

எந்த உணர்வையும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் விளையாட விட்டுவிடக் கூடாது. அப்படி நடந்தால் நஷ்டம் நமக்கு தான்.

Weekly Roundup Show வீடியோ ஒன்றில் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் 'EFGH' ஸ்ட்ரேட்டஜியை ஷேர் செய்திருந்தார்.

EFGH-ன் விரிவாக்கம் Emotion (உணர்வுகள்), Fear (பயம்), Greed (பேராசை), Hope (நம்பிக்கை).

உணர்வுகள் - பங்குச்சந்தை
உணர்வுகள் - பங்குச்சந்தை

உணர்வுகள்: பணம் செய்வதில் எந்த உணர்வும் குறுக்கிடவே கூடாது. குறுக்கிட்டால், அவசரத்தில் எந்த முடிவை வேண்டுமானாலும் நாம் எடுத்துவிடக் கூடும்.

பொதுவாக எந்த முடிவையும் எமோஷன் உடன் எடுக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். இந்த ரூல் பணத்திற்கும் பொருந்தும். ஒரு ரூபாயை இழப்பது எளிது. ஆனால், அதை சம்பாதிப்பது மிக மிகக் கடினம்.

பங்குச்சந்தையை சுற்றி நாம் அதிகம் கேட்ட கதைகள் நஷ்ட கதைகள். வெற்றி அடைந்த கதைகள் நம் காதை வந்து அடைந்தது மிக சொற்பமே.

ஏன் பல நஷ்ட கதைகள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது என்றால், பெரும்பாலும் எமோஷனலாக எடுத்த முடிவுகளாக தான் இருக்கும்.

அதுவும் பங்குச்சந்தை எப்போது ஏறும், எப்போது இறங்கும் என்று கணிக்கமுடியாது. ஏறும் போது எமோஷனலாக வாங்கி குவிப்பதும், இறங்கும் போது விற்பதும் தவறு. .

பங்குச்சந்தையில் முதலீடு என்பது பங்குகளின் வளர்ச்சி, நிறுவனத்தின் செயல்பாடு போன்ற ஆய்வுகளை பொறுத்துதான் இருக்க வேண்டுமே தவிர, எமோஷனலாக அல்ல.

பயம் - பங்குச்சந்தை
பயம் - பங்குச்சந்தை

பயம்: பெரும்பாலான மக்கள் பங்குச்சந்தையில் தோற்பது இந்த இடத்தில் தான். பங்குச்சந்தை கொஞ்சம் இறங்கினாலும் 'அய்யய்யோ பணம் போயிடுமே' என்கிற பயத்தில், நஷ்டத்தில் பலர் பங்குகளை விற்றுவிடுகின்றனர்.

'மாற்றம் ஒன்றே மாறாதது' - இது பங்குச்சந்தைக்கு சரியாக பொருந்தும் பன்ச். இன்று ஏறினால், நாளை இறங்கும். நாளை இறங்கினால், நாளை மாறுநாள் ஏறும். பங்குச்சந்தையில் ஏற்றமும் சரி... இறக்கமும் சரி... நிலையில்லாதது.

அதனால், பங்குச்சந்தையில் பயம் கூட்டவே கூடாது.

பேராசை: எல்லா உணர்வுகளை விடவும், பங்குச்சந்தையில் இருக்கவே கூடாத உணர்வு இது தான்.

பங்குச்சந்தையில் நாம் வைத்திருக்கும் பங்கு ஏற்றம் கண்டிருக்கும். இன்னும் ஏறும்... இன்னும் ஏறும் என்று வைத்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அந்தப் பங்கு விறுவிறு என இறங்கிவிடும்.

அப்போது எந்த லாபமும் இல்லாமலோ, பெரியளவு லாபம் இல்லாமலோ பங்கை விற்க வேண்டியதாக இருக்கும்.

ஒரு பங்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றாலே, இவ்வளவு லாபம் வந்தால், அந்தப் பங்கை விற்றுவிடுவேன் என்கிற இலக்கை செட் செய்துவிடுங்கள்.

பேராசை - பங்குச்சந்தை
பேராசை - பங்குச்சந்தை

அது வந்ததும், எந்த யோசனையும் இல்லாமல் விற்றுவிடுங்கள். அதை விடுத்து, இன்னும் ஏறும்... இன்னும் கொஞ்ச நாள் வைத்துகொள்கிறேன் என்று நினைத்தால், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... அது சந்தையில் எந்தவிதமான பாதிப்பை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் வையுங்கள்.

கூடவே, 'பேராசை பெருநஷ்டம்' என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இத்தனையும் தாண்டி, இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தப் பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்று தோன்றினால், 80 சதவிகித பங்கை விற்றுவிட்டு, வெறும் 20 சதவிகித பங்கில் மட்டும் ரிஸ்க் எடுங்கள்.

நம்பிக்கை: பங்குச்சந்தை ஒரு நாணயம் என்றால், அதன் இரு பக்கங்கள் - பயமும், நம்பிக்கையும். இப்போது ஏறுகிறது... இன்னும் ஏறும் என்கிற நம்பிக்கை பல நேரங்களில் பங்குச்சந்தையில் காலை வாரி விட்டுவிடுகின்றது.

அது மாதிரி இந்த நிறுவனம் நல்ல நிறுவனம் முதலீடு செய்கிறேன் என்றில்லாமல், பகுப்பாய்வு மூலம் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

பங்குச்சந்தையில் நம்பிக்கையை விட, எண்களை தான் நம்ப வேண்டும். அதனால், அதை தெரிந்து முதலீடு செய்யுங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User