மேகதாது: ``போராடிப் பெற்ற தீர்ப்பைக்கூட இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை" - எடப்பாடி பழனிசாமி

Aug 03, 2026 - 12:00
0
மேகதாது: ``போராடிப் பெற்ற தீர்ப்பைக்கூட இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை" - எடப்பாடி பழனிசாமி

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றே தெரியவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய பிரதிநிதிகளை அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று அதிமுக சார்பிலும், பிற கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும் பலமுறை வலியுறுத்தப்பட்டது. மூத்த சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்று ஊடகங்கள் மூலமாகவும் அறிக்கைகள் மூலமாகவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இந்த அரசு அதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை.

அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கின்றது. முன்பு அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, காவிரி அல்லது மேகதாது பிரச்னை வரும்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண்பார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்னையில் போராடிப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக்கூட, இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. கர்நாடக அரசு அங்குள்ள அரசியல் கட்சிகளையும் விவசாயிகளையும் மதிக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. காவிரி விவகாரத்தின் வரலாறு தெரியாத ஒரு ஆட்சியாகவே இது செயல்படுகிறது." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User