திமுகவில் இணைய ரூ.50 கோடி பேரமா? தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் விளக்கம் என்ன?

Jul 07, 2026 - 12:31
0
திமுகவில் இணைய ரூ.50 கோடி பேரமா? தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சரவணன், தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

த.வெ.க பெண் உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்
த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்

ஆய்வுக்குச் செல்லும்போது அதிகாரிகளை ஒருமையில் பேசுகிறார், குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன.

இந்த நிலையில், "முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ரூ.50 கோடி வரை பேரம் பேசினார்கள்.

லாரி ஏற்றிக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். எம்.எல்.ஏ குடியிருப்புக்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். நான் யாருக்கும் விலை போக மாட்டேன்" என மீடியாக்களிடம் பேசியதுடன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்த ஆடியோ முழுமையாக இல்லை. சரவணன் பேசும் பகுதி மட்டுமே உள்ளது. அவர் பேசிய நோக்கம் குறித்தும் கூறப்படவில்லை. சரவணன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளதால் அதனை திசை திருப்புவதற்காகவே இப்படிப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "உயிருக்குப் பாதிப்பு இல்லை என்று யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

அவரிடம் யாரும் பேரம் பேசவில்லை. அவர் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை. கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. உங்களை அனுப்பிவிட்டு நான் மானபங்க படுத்தவில்லை. செய்தவர் எல்லாம் அவர்தான்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User