மீண்டும் செயல்படத் தொடங்கிய அறக்கட்டளை; அடுத்த வருஷம் திருமணம்? - ‘பரம்பொருள்’ மகா விஷ்ணு அப்டேட்
சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ முதலான படங்களில் நடித்த மிருணாளினி ரவி ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவுடனான தனது காதலை நேற்று அறிவித்தார்.
‘உன்னை நேசிப்பது கடைசியில் என்னையே நான் நேசிப்பது போல’ என அவர் வெளியிட்டிருந்த பதிவுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பள்ளி ஒன்றில் தன்னம்பிக்கை பேச்சு பேசுவதாகச் சொல்லி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதையடுத்து கைதுசெய்யப்பட்டவர் மகா விஷ்ணு.
தொடர்ந்து அவருடைய ட்ரஸ்ட் குறித்தும், அந்த ட்ரஸ்டுக்குப் பணம் எப்படி வருகிறது என்பன குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

கடைசியில் ட்ரஸ்ட்டை மூடுவதாக அறிவித்தார் மகா விஷ்ணு. அதன் பிறகு அவர் குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில்தான் தற்போது மிருணாளினியுடனான காதல் செய்தி வந்துள்ளது.
இந்த நிலையில் பரம்பொருள் அமைப்பில் நிர்வாகிகளாக இருந்த சிலரிடம் பேசினோம்.
‘’மகா விஷ்ணு கைதைத் தொடர்ந்து பரம்பொருள் சேனலைத்தான் முடக்கி வச்சிருந்தோம். சாரிடபிள் ட்ரஸ்ட் இயங்கிட்டுதான் இருந்தது. வெளியில தப்பும் தவறுமா எங்களைப் பத்தி பல தகவல்கள் வெளியாகிட்டிருந்ததால் கொஞ்ச நாளைக்கு அமைதியா இயங்கலாம்னு முடிவு செய்து வழக்கமான எங்களுடைய பணிகளைச் செஞ்சிட்டிருந்தோம்.
.jpeg)
இப்ப சேனலும் பழையபடி இயங்கத் தொடங்கிடுச்சு. கடந்த மாதம் 2ம் தேதியில இருந்து முழுவீச்சில் செயல்படத் தொடங்கியிருக்கோம்’ என்ற அவர்களிடம், மகாவிஷ்ணுவின் காதல் குறித்தும் கேட்டோம்,
‘அதுதான் சம்பந்தப்பட்டவங்களே உலகத்துக்கு அறிவிச்சுட்டாங்களே. அடுத்த வருஷம் திருமணம் செய்யலாம்னு இருக்காங்க’ என்கிறார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)