'யார் அதிகம் ஓட்டு வாங்குனது?' - அமைச்சர் அருண்ராஜ் vs சிவசங்கர் காரசார விவாதம்!

Jun 19, 2026 - 16:01
0
'யார் அதிகம் ஓட்டு வாங்குனது?' - அமைச்சர் அருண்ராஜ் vs சிவசங்கர் காரசார விவாதம்!

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடந்து வருகிறது. அப்போது அமைச்சர் அருண் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

Arun Raj
Arun Raj

அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், 'திமுகவுக்கும் எங்களுக்கு 17 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் என கூறுகிறார்கள்.

தவெக தனித்து நின்று பெற்ற வாக்குகளும் திமுக கூட்டாக நின்று பெற்ற வாக்கையும் எப்படி ஒப்பிட முடியும்.

எங்களுக்கு விழுந்த ஒவ்வொரு வாக்கும் முதல்வர் விஜய்க்காக விழுந்தது.

பல கட்சி கூட்டணி அமைத்த திமுகவுக்கு விழுந்த வாக்குகள்...அவர்களின் கூட்டணிக்கும் சேரும்' எனப் பேசினார்.

இதற்கு பதில் கூறிய சிவசங்கர், 'எங்களோடு நின்றவர்களால்தான் உங்களின் ஆட்சியே ஓடுகிறது. நாங்கள் இனி தனித்து கூட நிற்போம். நீங்கள் இனியும் தனித்து நிற்போம் என சொல்ல தயாரா?' என எதிர்வினை ஆற்றினார்.


 சிவசங்கர்
சிவசங்கர்

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தவெக ஆட்சியின் மீது நிறைய விமர்சனங்களை முன்வைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User