தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த வடிவேல் கிராக்கர்ஸ் நிறுவன இயக்குநர்கள்!
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நன்கு படித்த விருதுநகரைப் பூர்வீகமாக கொண்ட விருதை மகள் தான், மாண்புமிகு அமைச்சர் செல்வி கீர்த்தனா.
தமது அதிரடியான தேர்தல் வியூகத்தினால் இதற்கு முன் சிவகாசி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வலம் வந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த அசோகன் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி ஒரு புரட்சி ஏற்படுத்திய 29 வயதே ஆன ஓர் இளம்பெண் வேட்பாளர்த்தான் கீர்த்தனா.
இவரின் அசாத்திய தேர்தல் வியூகத்தையும், தொகுதியின் அடிப்படை பிரச்னைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்ந்த ஆக்கபூர்வ சிந்தனைகளையும் உற்று நோக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை, இவரை தொழில்துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கூடுதல் முக்கிய பொறுப்புகளையும் இவர் வசம் ஒப்படைத்தது.

பொதுவாகவே `குட்டி ஜப்பான்' என அழைக்கப்படும் சிவகாசி நகரம் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சு தொழில்களின் தமிழக மையமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினருக்கு தொழில் துறை வழங்கப்பட்ட பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த பல தொழில் முனைவோர்களும் அமைச்சர் கீர்த்தனாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜூன் 14 - 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவகாசியை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதும் தனது வியாபாரத்தை விரிவுபடுத்திய... சிவகாசியில் மிகவும் பிரபலமான வடிவேல் பைரோடெக் நிறுவனத்தின் இயக்குநர்களான திரு வசந்த விகாஸ் ஆறுமுகசாமி அவர்களும், திரு அதிபன் ஆறுமுகசாமி அவர்களும் மரியாதை நிமித்தமாக மாண்புமிகு தொழில்துறை அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் சீனாவில் உள்ள பட்டாசு நிறுவனக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள வடிவேல் நிறுவன இயக்குநர்கள் சிவகாசியின் பட்டாசு தொழில் முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் அவற்றுக்கான ஏற்றுமதி சந்தையிடுதல் சம்பந்தமாகவும் தொழிலாளர்களின் நலன்கள் சம்பந்தமாகவும் பலதரப்பட்ட முக்கிய விவரங்களையும் அதை உள்ளடக்கிய பிரச்சனைகளையும் முன்வைத்து அவற்றை களைவதற்கான கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன் வைத்தனர்.

சில பல நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வடிவேல் நிறுவன இயக்குநர்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு அறிந்து, பின்னர் அதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான சிக்கல்களையும் கூறி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)