'சிறப்புக் குழந்தை'! எங்களுக்குப் பின் யாரு பாத்துப்பா? கேள்விக்கு பதில்| பணம் வளர்ப்போம்

Apr 23, 2026 - 12:02
 0
'சிறப்புக் குழந்தை'! எங்களுக்குப் பின் யாரு பாத்துப்பா? கேள்விக்கு பதில்| பணம் வளர்ப்போம்

'நமக்குப் பின் யார்?' என்கிற கேள்வி, சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களுக்குமே உண்டு.

அந்தக் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டமிடலைப் பற்றி கூறுகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V செந்தில்.

"சிறப்புக் குழந்தைகளின் சின்ன வயதிலேயே 'அறக்கட்டளை (Trust)' ஒன்றை ஆரம்பித்துவிடுவது நல்லது.

இந்திய சட்டப்படி, அறக்கட்டளை ஆரம்பிக்க சிறப்பு வழிமுறைகள்... விதிமுறைகள் எல்லாம் பெரிதாக இல்லை.

வழக்கறிஞர் ஒருவரிடம் ஆலோசனை பெற்று, சட்டப்படி அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்..

'சிறப்புக் குழந்தைக்காக' தான் அந்த அறக்கட்டளை என்பதை தெளிவுபடுத்துவது அவசியம்.

A.V செந்தில்
A.V செந்தில்

அந்த அறக்கட்டளையின் பெயரில் நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று முதலீட்டைத் தொடங்க வேண்டும்.

பெற்றோருக்குப் பின், அந்த அறக்கட்டளையின் முதலீடுகள் குழந்தைக்கு சரியாக செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னரே செய்துவிட வேண்டும்.

அறக்கட்டளையின் நாமினியாக இணையரை நியமியுங்கள். அவருக்குப் பின் நம்பகமான நபரை டிரஸ்டியாக நியமிக்க வேண்டும்.

சொல்வது புரிந்துகொள்ளக் கூடிய குழந்தையாக இருந்தால், குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, அறக்கட்டளைக் குறித்து குழந்தைகளிடம் சொல்லி வைப்பது நல்லது.

அறக்கட்டளையின் பெயரில் செய்யும் முதலீடுகள் அதிக ரிஸ்க் இல்லாமல் இருப்பது நல்லது. காரணம், டிரஸ்டியாக இருப்பவருக்கு எளிதாகவும், நம்முடைய குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் எளிதாக சென்று சேர்வது மாதிரியும் இருக்க வேண்டும்.

மேலும், ரிஸ்க் இல்லாமல் இருப்பது, அந்தக் குழந்தைக்கான முதலீட்டையும், பணத்தையும் உறுதி செய்யும்.

இதை விட முக்கியமாக, டிரஸ்டியாக மிக நம்பகமான நபரைத் தேர்ந்தெடுங்கள்".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0