'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது!

Jun 26, 2026 - 15:31
0
'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் வலைதளம், நிறுவனங்களின் வலைதளம், UMANG ஆப் ஆகியவை ஐந்து நாள்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யாது என்று EPFO அறிவித்துள்ளது.

என்ன காரணம்?

கணினி மேம்பாட்டுப் பணி காரணமாக இந்த வலைதளங்கள் மற்றும் ஆப் தற்காலிகமாக வேலை செய்யாது.

எப்போது முதல் எப்போது வரை?

இன்று (ஜூன் 26, 2026) முதல் வருகிற ஜூன் 30, 2026 வரை மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளது.

அதன் பின், வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் வழக்கம் போல் EPFO வலைதளங்களிலும், UMANG ஆப்பும் செயல்படும்.

EPFO
EPFO

இந்த 5 நாள்களில் என்னென்ன சேவைகளை செய்ய முடியாது?

> கிளெய்ம் சமர்ப்பித்தல் மற்றும் பரிசீலனை

> ECR தாக்கல்

> புதிய ஊழியர்களுக்கு UAN இணைத்தல்

> e-பாஸ்புக் சேவைகள்

ஏன் இந்த மேம்பாட்டுப் பணி?

வலைதளங்களும், ஆப்களும் வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு இந்த மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சமயத்தில் முக்கியமான அல்லது அவசரமான பணியாளர் வருங்கால வைப்பு நிதி பணி ஏதேனும் இருந்தால் 14470 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User