ரூ.15,000-க்கு கீழ் ரெகுலர் பேமென்ட் ஏதாவது இருக்கா? - இனி OTP கிடையாது - இது இப்போதே அமல்!
திரும்ப திரும்ப குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யும் பேமென்ட்டுகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, மேலே சொன்ன மாதிரி, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பேமென்ட் செய்து வந்திருப்போம்.
உதாரணத்திற்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு OTT தளத்திற்கு ரூ.300-ஐ சப்ஸ்கிரிப்ஷனாக கட்டி வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
இனி இந்தப் பேமென்ட்டுகளுக்கு OTP தேவைப்படாது.
ரூ.15,000-க்கு கீழ் அடிக்கடி கட்டி வரும் பேமென்ட்டுகளுக்கு OTP பதிவு செய்து கொண்டிருக்க வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒருமுறை, ‘இனி OTP தேவையில்லை’ என்கிற ஆப்ஷனைக் க்ளிக் செய்துவிட்டால், அதற்கு மேல், அந்தப் பேமென்ட்டுகளுக்கு OTP கேட்கப்படாது.
இந்த நடைமுறை இப்போதே அமலுக்கு வந்துவிட்டது.
இன்சூரன்ஸ் பிரீமியம், எஸ்.ஐ.பி, கிரெடிட் கார்டு பில் போன்றவற்றுக்கு இந்த லிமிட் ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இது உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல… இந்தியாவைத் தாண்டி வேறு யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டுமானாலும் இந்த நடைமுறை பொருந்தும்.
இது கிட்டத்தட்ட ‘ஆட்டோ டெபிட்’ போன்ற ஆப்ஷன் தான்.
ஆனால், ஆட்டோ டெபிட்டிற்கும், இந்த நடைமுறைக்கும் என்ன வித்தியாசம் என்றால்…
ஆட்டோ டெபிட்டில் சத்தமே இல்லாமல், நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சென்று கொண்டிருக்கும்.
ஆனால், இந்த புதிய நடைமுறையின் படி, பேமென்ட் செல்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு, இது குறித்த அலர்ட் மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.
அந்த நேரத்தைப் பயன்படுத்தி பேமென்ட்டை கேன்சல் செய்ய நினைத்தாலும் கேன்சல் செய்துவிடலாம்.
கேன்சல் செய்யும் நடைமுறை மிக மிக எளிது.
எத்தனை காலத்திற்கு இந்தப் பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்பதை செட் செய்துகொள்ளலாம்.
இந்த நடைமுறைக்காக வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பெற முடியாது.
ஆட்டோ டெபிட் சில ஆப்களில்தான் இருந்து வந்தது. இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடைமுறையின் படி, பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகளுக்கு வந்துவிட்து.
ஆட்டோ டெபிட்டை விட, இந்த புதிய நடைமுறை இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வருவதால் பாதுகாப்பானது.
மேலும் ரூ.15,000-க்கு மேல், நமக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை நடந்துவிடாது என்பதால், அது நம்முடைய பாதுகாப்பு பக்கத்திலேயே எப்போதும் இருக்கும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0