இன்ஸ்டா நட்பு; தன்பாலின உறவு - திருமணத்திற்கு மறுத்த பார்ட்னரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்

Jun 01, 2026 - 11:32
0
இன்ஸ்டா நட்பு; தன்பாலின உறவு -  திருமணத்திற்கு மறுத்த பார்ட்னரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நாகபள்ளி என்ற இடத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். அவர்களது நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் அது தன்பாலின உறவாக மாறியது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இதனால் சூரஜ் சதீஷ்குமாரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். ஆனால் சதீஷ்குமார் திருமணத்திற்கு தயக்கம் காட்டினார். சதீஷ்குமாருக்கு ஏற்கனவே சொந்த ஊரில் திருமணமாகிவிட்டது.

ஊரில் கேரேஜ் தொழில் செய்து வந்தார். திருமணத்திற்கு மறுத்ததால் நேரில் பார்த்து சம்மதிக்க வைக்கலாம் என்று கருதி சூரஜ் ஒடிசாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலிக்கு வந்தார்.

கட்சிரோலிக்கு வந்த பிறகுதான் சதீஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமான விவகாரம் சூரஜிற்கு தெரிய வந்தது. ஆனாலும் இரண்டு நாட்கள் சதீஷ்குமாருடன் சூரஜ் இருந்தார். சூரஜ் தனது கிராமத்திற்கு புறப்பட முடிவு செய்தார்.

சதீஷ்குமார் அவரை தனது காரில் அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றார். தேவ்டா என்ற கிராமத்திற்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சதீஷ்குமார் தன்னிடம் ஏற்கனவே திருமணமான விசயத்தை மறைத்துவிட்டதாக கூறி சூரஜ் வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றியது. இதனால் சூரஜ் தன்னுடன் எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தினார். அவர் சதீஷ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் குமார் இறந்துவிட்டார். அங்கிருந்து சூரஜ் தப்பித்து செல்ல முயன்றார். ஆனால் கிராம் மக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User