உதயநிதியின் சர்ச்சை பேச்சு: "நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" - குஷ்பு| Live Updates
பாஜக நிர்வாகி குஷ்பு
உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன். அது மிகவும் அருவருப்பான, மலிவான மற்றும் ஆழமான இழிவுபடுத்தும் பேச்சாக இருந்தது.
அவர் எந்த அரசியல் கலாச்சாரத்தை வாரிசாகப் பெறத் துடிக்கிறாரோ, அதையே அது பிரதிபலிக்கிறது.
இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தவும், என்றாவது ஒருநாள் இந்த மாநிலத்தை ஆளவும் ஆசைப்பட்டால், கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்களை ஏசுவது, இழிவுபடுத்துவது மற்றும் அவமானப்படுத்துவதை ஒருவகை அரசியல் நாடகமாக மாற்றி, தங்கள் விசுவாசிகளின் கைதட்டல்கள், விசில்கள் மற்றும் சிரிப்பொலிகளில் திளைக்கும் நபர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இதைப் பற்றி என்னை விட வேறு யாருக்குச் நன்றாகத் தெரியும்?
இத்தகைய கீழ்த்தரமான மொழியை இயல்பாக்குபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
பெண்களின் கண்ணியம் அரசியலுக்குப் பலியாக்கப்பட்டுவிட்டால், நாளை உங்கள் சொந்தக் குடும்பம் உட்பட எந்தக் குடும்பமும் இதேபோன்ற தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியாது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், பொது தளத்துப் பேச்சுக்கு என்று ஒரு எல்லை இருக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும்.
உங்கள் இஷ்டத்திற்கும் ஆசைக்கும் ஆட்டுவிக்கும் காய்களாக அவர்களை நடத்தக் கூடாது.
உங்கள் அரசியல் எதிரியின் திறமை, தொலைநோக்குப் பார்வை அல்லது தலைமைத்துவத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாதபோது, தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசுவதும் ஆபாசமாக நடந்துகொள்வதும் எளிதான தப்பித்தல் வழியாகிவிடுகிறது. உதயநிதிஸ்டாலின் மற்றும் அவரது தந்தை ஸ்டாலின் ஆகியோர் பல ஆண்டுகளாகப் பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளனர், ஆனால் அதுவே பொது வாழ்க்கையின் தரநிலையாக மாறிவிடக் கூடாது.
ஒரு பொது மேடையில் திருமதி த்ரிஷாவை இழிவுபடுத்தியதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தான் செய்த இந்த அசிங்கமான தவறை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் தைரியமும் நாகரிகமும் அவருக்கு இருக்கிறதா என்று பார்ப்போம்!
Heard #Udhayanidhi Stalin's speech. It was crass, cheap and deeply derogatory; reflecting the very political culture he seems eager to inherit.
— KhushbuSundar (@khushsundar) August 4, 2026
If those with such a mindset aspire to lead a political party and one day govern the state, then God help us. What else can one expect…
தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்
தமிழ்நாடு விவசாயிகளின்- பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சனையில்... நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,
— Arunraaj TVK (@arunraajkg) August 4, 2026
நாங்களும் போராடுகிறோம் என ஷோ காட்டும் விதமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக…
பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
#ஆபாசநிதி
— Rajmohan (@imrajmohan) August 3, 2026
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட… pic.twitter.com/i7YBQzgp9Q
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி அவர்கள் பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனம்!
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) August 3, 2026
பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அண்மையில் உதயநிதி அவர்கள்…
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
— N Anand (@BussyAnand) August 3, 2026
அவை அடக்கமும்…
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
— TVK Ramesh (@RameshOffcl) August 3, 2026
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
இன்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 3, 2026
அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.@Udhaystalin
'அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்துப் போராட்டம்' என நேற்று தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷாவைக் குறிப்பது போல ஆபாசமாகப் பேசியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
அவரது ஆபாசப் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதன் தொகுப்பு இது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)