ஜனநாயகக் கடமையை ஆற்றிய எடப்பாடி கே.பழனிசாமி!
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று (23.04.2026 – வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சென்று வாக்களித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி அவர்கள், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் காசி, நாம் தமிழர் கட்சி சார்பில் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் அந்த தொகுதியில் களம்காண்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0