"இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!"- தமிழிசைக்கு சு.வெ பதில்

Mar 4, 2026 - 18:00
 0
"இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!"- தமிழிசைக்கு சு.வெ பதில்

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் "எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிபெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள்.

அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்" என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜனின் கோரிக்கைக்கு எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுக்கும் வகையில், " இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள்.

இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது.

வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சி"என்று பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

Loading…

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0