"ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்!" - முதல்வரை சந்தித்த அன்புமணி

Jun 09, 2026 - 14:30
0
"ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்!" - முதல்வரை சந்தித்த அன்புமணி

முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகம் சென்று இன்று (ஜூன்.9) சந்தித்து பேசியிருக்கிறார்.

முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி, " சமூகநீதி கணக்கெடுப்பு என்கிற சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அன்புமணி
அன்புமணி

வருகின்ற சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள தவெகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது.

நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சம் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மாறியுள்ளார்கள்; அதிகாரிகள்தான் தான் இன்னும் மாற வேண்டும். தவெக அரசுக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

விஜய் - அன்புமணி
விஜய் - அன்புமணி

புதிய அரசு அமைந்து அனைத்தையும் ஒரே மாதத்தில் செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மின் திட்டம் கூட கொண்டு வரவில்லை" என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User