திருச்சி தீரன்நகர்: குவியும் குப்பை... பாழாகும் கோரையாறு - சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காணப்படுமா?

Jul 17, 2026 - 15:00
0
திருச்சி தீரன்நகர்: குவியும் குப்பை... பாழாகும் கோரையாறு - சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காணப்படுமா?

திருச்சி தீரன்நகர் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியை முக்கிய சாலையுடன் இணைக்கும் பாலம், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும், அருகிலுள்ள தமிழ்நாடு அரசு பஸ் டிப்போ போக்குவரத்துக்கும் முக்கியமாகப் பயன்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் கீழ் கோரையாறு ஓடுகிறது.

தற்போது பாலத்தின் கீழ் நீர்வரத்து இல்லாததால், காலியாக உள்ள பகுதியை சிலர் குப்பைகள் கொட்டும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், மழைக்காலங்களில் இந்தக் குப்பைகள் கோரையாற்றில் கலந்து சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதோடு, அப்பகுதியில் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததும், வீடுகளில் இருந்து குப்பைகளை தினசரி சேகரிக்கும் நடைமுறை இல்லாததும் இந்த நிலைக்கு ஒரு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில், அப்பகுதியில் போதுமான குப்பைத்தொட்டிகளை அமைத்து, அனைத்து வீடுகளிலிருந்தும் தினசரி குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தீரன்நகர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User