'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

Mar 11, 2026 - 12:31
 0
'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது. மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக வலியுறுத்த, தனிச்சின்னத்தில் நிற்க வேண்டுமென மதிமுக நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

மதிமுக உயர்நிலைக் குழு
மதிமுக உயர்நிலைக் குழு

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மதிமுகவியின் உயர்நிலை குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்திருந்தது. கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுக்க கூடிய இந்த கூட்டத்துக்கு வருகை தந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, 'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்' என கூறிவிட்டு சென்றார்.

அவர் பேசியதாவது, 'கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் நான் இல்லை. ஆனால், எங்கள் தரப்பினர் மதிமுகவின் விருப்பத்தை திமுகவிடம் தெரியப்படுத்தயிருக்கிறார்கள். திமுக அவர்களின் சூழ்நிலையை எங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எங்களின் கூட்டணி ஏற்கனவே வலுவாக இருக்கிறது. இப்போது மேலும் சிலர் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்.

துரை வைகோ
துரை வைகோ

மதவாத சக்திகளுக்கு எதிரான பொதுவான கருத்தோடு எல்லாரும் இணைந்திருக்கிறோம். கூட்டணியில் எங்களால் பிரச்னை ஏற்படாது. இயக்கத்தின் நலனை விட தமிழகத்தின் நலனை முக்கியம். சில விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் தாமதமும் இல்லை' என்றார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்தாலும், துரை வைகோ அதனை விரும்பவில்லை என்றும், கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தனிச்சின்னத்தின் தான் நிற்க வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், துரை வைகோவின் தற்போதைய கருத்து, மதிமுக, வரும் தேர்தலில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரி்விப்பதாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0