ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

Jun 29, 2026 - 16:32
0
ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் ராமேஸ்வரத்தில் ஶ்ரீ பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண முகவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற ராஜா, அங்கு வரவேற்பாளராகப் பணிபுரியும் பெண்ணிடம் பயணம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளார்.

பயண ஏற்பாட்டாளர் ராஜா
பயண ஏற்பாட்டாளர் ராஜா

அந்தப் பெண் பயண ஆவணங்களை நகல் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ராஜா அந்தப் பெண்ணின் உடலில் கிள்ளி பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் ஹோட்டல் மேலாளரிடம் இது குறித்து புகார் செய்ததுடன், வீட்டிற்குச் சென்று தனது கணவரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜாவிடம் இது குறித்து செல் போனில் கேட்டுள்ளார்.

அப்போது எதிர் தரப்பில் பேசிய பயண ஏற்பாட்டளரான ராஜா, பாதிக்கபட்ட பெண்ணையும், அவரது கணவரையும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து அப்பெண் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் அளித்தார்.

பாலியல் சீண்டல்

இதனைத் தொடர்ந்து பயண ஏற்பாட்டாளர் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த ராஜா போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தலைமறைவான ராஜாவை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User