'சிவப்பு துண்டுடனேயே தவெகவில் பயணிப்பேன்!' - தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்

Jun 18, 2026 - 19:00
0
'சிவப்பு துண்டுடனேயே தவெகவில் பயணிப்பேன்!' - தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்திருக்கிறார்.

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

திமுக, அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் தவெக-வில் இணைந்து வரும் சூழலில், திடீரென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெக-வில் இணைந்திருக்கிறார். 12 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளராக இருந்த அவர், இன்று பனையூரில் அமைச்சர்கள் ஆனந்த், கீர்த்தனா, வெங்கட்ரமணன் முன்னிலையில் தவெக-வில் இணைந்திருக்கிறார்.

தவெக-வில் இணைந்தது குறித்து சி.மகேந்திரன் பேசுகையில், 'தவெக வென்றது ஒரு ஜனநாயக புரட்சி. தேர்தலில் தவெக சாதியை ஒழித்திருக்கிறது. விஜய்யால் ஊழலை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. எளிய மக்களுக்காக காந்தி, பெரியார் உருவாக்கியதை போல பெரிய இயக்கமாக இந்த இயக்கம் வரும். நாமெல்லாம் இணைந்து பயணிக்க வேண்டும். சிவப்பு துண்டுடனேயே இந்த இயக்கத்தில் பயணிக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

ஜூன் 22 ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்தநாள். அதை முன்னிட்டு மாற்றுக்கட்சியினர் பலரும் தவெகவில் இணையவிருப்பதாக தகவல்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User