Suriya - Jyothika: "நாங்கள் வீட்டில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை!" - சூர்யா - ஜோதிகா
சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களின் திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்கள். அதையொட்டி அவர்கள் இருவரும் இணைந்து 'ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்கள்.
அந்தப் பேட்டியில் அவர்களுடைய குழந்தைகள் பற்றியும், அவர்களின் ஆர்வம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்கள்.

அதில் சூர்யா பேசுகையில், "நாங்கள் வீட்டில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை" என்றாதும் ஜோதிகா, "குழந்தைகளுக்கு அதில் ஆர்வமே இல்லை. யாராவது புகைப்படம் எடுத்தால் கூடச் சங்கடப்படுவார்கள்.
நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் ரொம்பத் தெளிவான குழந்தைகள் என ஒரு தாயாக நான் பெருமையுடன் சொல்வேன். சூர்யாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. ஒரு அருமையான குடும்பம்.
அவர்கள் எப்போதும் உதவிகள் செய்து வருபவர்கள். குழந்தைகள் அதைப்பார்த்தே வளர்ந்திருக்கிறார்கள். சென்னைக்கே உரிய அந்த எளிமையையும் பார்த்து வளர்ந்தார்கள். நாங்கள் மும்பைக்கு வந்தபோதும், அவர்களுக்கு மும்பை ரொம்பப் பிடித்துவிட்டது.
அங்குள்ள சூழல், புதிய மனிதர்களைச் சந்திப்பது எல்லாம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் தங்களுக்கான நல்ல நண்பர்களையும் சரியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.

எங்களுடைய மகள் தியா ஒரு ஆவணப்படத்தை எடுத்திருந்தார். ஆனால், அவருக்குத் திரைத்துறையில் ஆர்வமில்லை. அவர் அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதற்காக புரொஃபைல் தயாரித்துக் கொண்டிருந்தார்.
அந்த ஆவணப்படத்திற்கான முழுப் படப்பிடிப்பையும் அவரே தனியாகச் செய்து முடித்தார். கேமரா கருவிகளைக் கொண்டு செல்ல எங்களுடைய கார் மட்டும்தான் எங்களிடம் அவர் கேட்டார். பிறகு, அனைத்தையும் அவரே திட்டமிட்டுச் செய்தார். இது எங்களுக்கு ரொம்பவே பெருமையாக இருந்தது" எனப் பகிர்ந்துகொண்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)