"ஆடிப்பெருக்கு அப்போ தண்ணி எப்படி வந்தது? கர்நாடக அரசு நமக்கு.!" - சௌமியா அன்புமணி உரை

Aug 07, 2026 - 13:01
0
"ஆடிப்பெருக்கு அப்போ தண்ணி எப்படி வந்தது? கர்நாடக அரசு நமக்கு.!" - சௌமியா அன்புமணி உரை

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய சௌமியா அன்புமணி, " தமிழ்நாட்டிற்கு உரிய 175 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு அட்டவணைப்போட்டு சரியான நேரத்திற்கு நமக்கு வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் இதுவரைக்கும் அவர்கள் அப்படி செய்ததே கிடையாது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே இல்லை.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

தண்ணீர் சரியாகத் திறந்துவிடாதக் காரணத்தினால் தான் குறுவை சாகுப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது.

நமக்கு தரவேண்டிய தண்ணீரை அவர்கள் கொடுக்கவில்லை. ஆடிப்பெருக்கு அன்று மட்டும் எப்படி தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீர் கர்நாடக அரசு நமக்கு தரவில்லை.

கேரளாவில் அதிகமான மழை பெய்ததன் விளைவாக கபினி அணை நிரம்பியதால் தான் உபரிநீராக தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து வரும் தண்ணீர் தான் அது. வேறு வழியில்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்துள்ளது.

அதிகமான வெள்ள நீர் ஊருக்குள் வந்து பாதிப்படையக்கூடாது என்று தான் அவர்கள் அந்தத் தண்ணீரை திறந்துவிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் அவர்கள் மேகதாது அணையை கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

தமிழகத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் அளவில் தான் இந்த அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அணை கட்டினால் வன விலங்குகள் மட்டுமல்லாமல், இயற்கை வளங்கள் முழுவதும் அழிந்து விடும். பல்வேறு வழக்குகள் முன்வைத்து இந்த அணை கட்டுவதற்கு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User