திருவள்ளூரில் 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பீகாரை சேர்ந்த ஒருவர் கைது

Jun 15, 2026 - 10:32
0
திருவள்ளூரில் 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பீகாரை சேர்ந்த ஒருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது சிப்காட் பகுதி ஒன்று.

அங்கு நேற்று மாலை ஒரு வட மாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் சென்றுள்ளது.

அந்தக் குழந்தையை சிப்காட் பகுதி முழுவதும் தேடியதில், முட்புதரில் காயங்களுடன் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உடனே, குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையைக் கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தை பாலியல் வன்கொடுமை
குழந்தை பாலியல் வன்கொடுமை

முதலுதவி அளித்த பிறகு, குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த போலீசார் விசாரணையில் அந்தக் குழந்தையைப் பிஸ்கட் வாங்கி தந்து அழைத்து சென்று வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User