``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி
துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' படத்தை விராட் கோலி பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
" 'துரந்தர்' படத்தைப் பார்த்தேன். இந்தியாவில் எடுக்கபட்ட படங்களில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை. கிட்டதட்ட 4 மணி நேரத்தில் ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டாமல் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆதித்ய தர்... உங்களின் திறமையும், உறுதியும் இந்தப் படத்தில் பிரதிபலிக்கின்றன. நீங்கள் ஒரு மேதை! உங்களுக்கு எனது பாராட்டுகள்.
படத்தில் நடித்த அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடித்திருந்தாலும் ரன்வீர் சிங் இந்தப் படத்தின் மூலம் நீங்கள் ஒரு புதிய உயரத்தை எட்டியிருக்கிறீர்கள். உங்கள் நடிப்பு அற்புதமாக இருந்தது" என்று பாராட்டியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0