டெல்லி: `உடலில் ரத்தத்தை தெளிப்பார்கள்'- பெண்ணை பாலியல் கொடுமை செய்து மதமாற்ற செய்ய முயன்ற கும்பல்

May 21, 2026 - 20:30
0
டெல்லி: `உடலில் ரத்தத்தை தெளிப்பார்கள்'- பெண்ணை பாலியல் கொடுமை செய்து மதமாற்ற செய்ய முயன்ற கும்பல்

டெல்லியில் பாட்லா என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் சாஹில் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர், தான் ஒரு பணக்கார இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த நபரின் பெயர் பாஹீம் என்று பின்னர் அப்பெண் தெரிந்து கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள சாஹில் வீட்டிற்கு அப்பெண் சென்றார். அங்கு சாஹிலும் அவரது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினர். அப்பெண்ணை மீரட்டிற்கு அழைத்து சென்று அங்கும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதையடுத்து அப்பெண் இது குறித்து டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சாஹில் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அப்பெண் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ``என்னை பயமுறுத்த என் உடம்பு முழுக்க ரத்தத்தால் நனைப்பார்கள். அதோடு என் மீது விலங்குகளின் இறைச்சியை போட்டு என்னை பயமுறுத்துவார்கள். என்னை தஸ்லீம் என்பவரும் சித்ரவதை செய்தார். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றனர். அவர்கள் ஆயுத வியாபாரம் செய்வதும் எனக்கு தெரிய வந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

குருகிராம் போலீஸார்தான் அவர்களை கைது செய்துள்ளனர். அப்பெண்ணை மிரட்டுவதற்காக எடுக்கப்பட்ட வீடியோ இருந்த மொபைல் போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சிறையில் இருந்து கொண்டு சாஹில் தன்னை தொடர்பு கொண்டு மிரட்டினான் என்றும், துபாய் நம்பரில் இருந்து ஒரு மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். அது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User