படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத்தில் பாலிவுட்!

May 07, 2026 - 12:30
0
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத்தில் பாலிவுட்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் படம் இந்த அளவுக்கு அதிக வசூலைக் கொடுத்த பிறகும் ரன்வீர் சிங் புதிய படம் எதிலும் பங்கேற்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

அதோடு ரன்வீர் சிங் இப்போது வீட்டை விட்டு வெளியில் வராமல் தனது மகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். ரன்வீர் சிங் மனைவியான நடிகை தீபிகா படுகோனே தற்போது குழந்தையை மும்பையில் விட்டுவிட்டு நடிகர் ஷாருக்கானுடன் கிங் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடு சென்று இருக்கிறார்.

எனவே அவர் திரும்பி வரும் வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலையை ரன்வீர் சிங் செய்து வருகிறார்.

தனது வேலைகளுக்கு பிரேக் கொடுத்துவிட்டு குழந்தையைக் கவனித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொழிலில் ஆதரவாக இருப்பது குறித்து பாலிவுட்டில் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தீபிகா படுகோனே சமீபத்தில்தான் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அப்படி இருந்தும் ஷாருக்கான் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று இருக்கிறார்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே

ஷாருக்கானும், தீபிகா படுகோனேயும் தண்ணீரில் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கிங் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சில நாள்களுக்கு தீபிகா படுகோனே தென்னாப்பிரிக்காவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தந்தை மற்றும் தாய் ஆகியோரின் இரண்டு வேலையையும் ரன்வீர் சிங் செய்து வருகிறார்.

சமீபத்தில்தான் ரன்வீர் சிங்கிற்கும், டான் 3 படத்தயாரிப்பாளர் பர்ஹான் அக்தருக்கும் இடையே இருந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. பாலிவுட் நடிகர்கள் ஆமீர் கான் போன்ற பிரபலங்கள் இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு முடிவு கண்டுள்ளனர்.

ரன்வீர் சிங், டான் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ரூ.10 கோடி முன்பணமும் வாங்கினார். அவரை நம்பி தயாரிப்பாளர் தரப்பில் இடம் தேர்வு போன்ற படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது.

ஆனால் ரன்வீர் சிங் திடீரென இப்படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ரன்வீர் சிங் தங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று பர்ஹான் அக்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது பேச்சுவார்த்தையில் ரன்வீர் சிங் வாங்கிய முன்பணம் ரூ.10 கோடியைத் திரும்ப கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User