'இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்' - அஜித் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

May 30, 2026 - 13:02
0
'இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்' - அஜித் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார்.

இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து வந்தார். துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதும் சென்னைக்குக் கிளம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தாயாருடன் நடிகர் அஜித்
தாயாருடன் நடிகர் அஜித்

திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், முதல்வர் விஜய் அஜித்குமாரின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கக் கணக்கில் இருந்து பதிவிடப்பட்டிருக்கும் இந்தப் பதிவில், "அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User