"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

May 30, 2026 - 20:32
0
"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் தங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

கடந்தாண்டு பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புனேயில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) 150-வது பயிற்சிப் படிப்பின் நிறைவு நாள் அணிவகுப்பு விழாவில்செய்தியாளர்களைச் சந்தித்த ஜெனரல் உபேந்திர திவேதி, "ஆபரேஷன் சிந்தூர் பொறுத்தவரை, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் மட்டுமே நிலவுகிறது. எனவே, ஒருவேளை அடுத்த கட்டப் போர் மூண்டால், 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையை எதிர்கொள்ள இந்திய ராணுவமும், மற்ற இரு படைகளும் மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன.

Upendra Dwivedi
Upendra Dwivedi

தற்போது போர்க்களங்கள் வெளிப்படையாக மாறிவிட்டன. நமது ஒவ்வொரு அசைவும் அடுத்த தரப்பிற்கு எளிதில் தெரிந்துவிடுகிறது.

எனவே, எல்லையோரப் பகுதிகளில் நமது படைகளை நிலைநிறுத்துவது, கையாள்வது மற்றும் நமது வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User