CSK: "கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது"- ஓய்வு குறித்து அஷ்வின்

Apr 6, 2026 - 16:33
 0
CSK: "கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது"- ஓய்வு குறித்து அஷ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவரது இறுதி சீசன் ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்த ஒன்றாக இருந்தது என இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியிருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருந்தார் அஷ்வின்.

இருப்பினும் அவர் சிஎஸ்கே அணியில் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார்.

அஷ்வின்
அஷ்வின்

இந்நிலையில் ஐபிஎல்லில் ஓய்வு பெற்றது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், " சொந்த ஊரான சென்னையில் தொடங்கிய பயணத்தை அங்கேயே முடிப்போம் என்று நினைத்தேன்.

ஆனால் கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது. என்னை விடுவிப்பதா? இல்லை தக்கவைப்பதா? என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்று நினைத்தேன்.

அதனால் நானே ஓய்வை அறிவித்துவிட்டேன். நான் விலகியதால் எனக்கு கொடுக்க வேண்டிய 10 கோடியை வைத்து நல்ல இளம் வீரர்களை மினி ஏலத்தில் எடுப்பார்கள் என்று நினைத்தேன்" என்று பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0