சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!
வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீஸார் வேலப்பனை போக்சோ வழக்கில் கைதுசெய்தனர்.

இந்நிலையில் காவலர் வேலப்பனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை பெருநகர காவல், R-8 வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் P.வேலப்பன் (த.கா.51236) என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக W-26 அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் வேலப்பன் என்பவரை நேற்று (28.06.2026) கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 311 ன் கீழ், மேற்படி தலைமைக் காவலர் P.வேலப்பன் என்பவர் இன்று (29.05.2026) பணி நீக்கம் (Dismissal from Service) செய்யப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)