பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? - செங்கோட்டையன் பேசியது என்ன?

Jun 27, 2026 - 08:32
0
பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? - செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

அப்போது அவர் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டை குறித்து பேசியதாவது...

"பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஜய் செங்கோட்டையன்
விஜய் செங்கோட்டையன்

முதல்வரின் உத்தரவின்படி, முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த அட்டையில் மாணவரின் முகவரி, சாதிச் சான்றிதழ் விவரங்கள், இரத்த வகை, ஆதார் எண், தொலைபேசி எண்

ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.

இதன் மூலம் மாணவர்கள் சான்றிதழ்களுக்காக அலைவது தவிர்க்கப்படும்".

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி பெயர்‌ என்கிற அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையையும், எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User