`ஒரே இடத்தில் 364 ரௌடிகள்; இனிமேல் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது' - திருச்சி எஸ்.பி வார்னிங்

May 11, 2026 - 15:02
0
`ஒரே இடத்தில் 364 ரௌடிகள்; இனிமேல் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது' - திருச்சி எஸ்.பி வார்னிங்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 364 பேரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வரவழைத்தனர். அவர்கள் அனைவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் முன்பு ஆஜர்படுத்தினர்.

அவர்கள் அனைவரின் தனிப்பட்ட விவரங்கள், குடும்ப சூழ்நிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். குறிப்பாக, 'இனிமேல் எந்த விதமான குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.

sp advice

எஸ்.பி-யின் எச்சரிக்கை கலந்த அறிவுரைக்கு பின், 'இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்' என்கிற நிலைப்பாட்டோடு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

திருச்சி மாவட்டத்தில் இது போன்ற நிகழ்வு இதுவே முதல் முறையாக நடத்தப்பட்டது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே இடத்தில நூற்றுக்கணக்கான ரௌடிகளை வரவழைத்து எஸ்.பி அறிவுரை வழங்கிய சம்பவம், மாவட்ட அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User