கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

Jun 02, 2026 - 11:02
0
கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று கஞ்சா விற்று வந்திருக்கிறது.

இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் விஷ்ணு.

அந்தக் காவல் நிலையத்தில் உள்ள காவலர் ஒருவர் விஷ்ணுவின் புகார் குறித்து கஞ்சா விற்கும் கும்பலுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தக் கும்பல் விஷ்ணுவிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போலப் பேசி வரவழைத்துள்ளனர்.

விஷ்ணு வந்தவுடன், ஏற்கெனவே கஞ்சா போதையில் இருந்த அந்தக் கும்பல், அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் விஷ்ணுவைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதல்
தாக்குதல்

இதில் படுகாயமடைந்த விஷ்ணு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூன்று நாள்களாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு, நேற்று உயரிழந்திருக்கிறார்.

'காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் விஷ்ணுவின் உயிர் போயிருக்கிறது' என்று விஷ்ணுவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பின்னர், 'சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்கிறோம்' என்கிற காவல்துறை ஆணையர் உறுதிக்குப் பின், விஷ்ணுவின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டிருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User