"மக்களின் தீர்ப்பே மகத்தானது; துரதிருஷ்டவஷமாக யாருக்கும் பெரும்பான்மை இல்லை.!"- எம்.பி கனிமொழி

May 08, 2026 - 13:01
0
"மக்களின் தீர்ப்பே மகத்தானது; துரதிருஷ்டவஷமாக யாருக்கும் பெரும்பான்மை இல்லை.!"- எம்.பி கனிமொழி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.

ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுக-வும் அதிமுக-வும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக எம்.பி கனிமொழியிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " த.வெ.கவை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். மக்களின் தீர்ப்பே மகத்தானது. அதை மதிக்க வேண்டும். துரதிருஷ்டவஷமாக யாருக்கும் பெரும்பான்மை இல்லை. யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User