நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

Jul 08, 2026 - 21:32
0
நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதிப்புகளைக் கூறினர். அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது அறிமுகமான நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதைக் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதுகுறித்து ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல 16 வயது மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், பின்னர் பல்வேறு எண்களில் இருந்து தொந்தரவு செய்து வந்தாகக் கூறினார். இதுகுறித்து குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு தகவல் கூறப்பட்டதுடன், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் 15 வயது மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை வேறொருவருடன் இருப்பது போல ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் தவறாக சித்திரித்ததாக புகார் கூறினார். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டு தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பெண் படையினர்

”இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் 3 மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை துணிச்சலாக காவல்துறையினரிடம் கூற வேண்டும். உடனடி நடவடிக்கை மோற்கொள்ளப்படும்” என, சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User