கிருஷ்ணகிரி : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 16 வயது சிறுவன் கைது!

Jun 13, 2026 - 09:30
0
கிருஷ்ணகிரி : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 16 வயது சிறுவன் கைது!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ
போக்சோ

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயதான சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கூச்சலிட அங்கிருந்து சிறுவன் வெளியே ஓடியுள்ளார்.

போக்சோ வழக்கு

அதன் பின் நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்க, உடனே அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின்பு தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி தரப்பில் புகார் செய்தனர்.

புகாரை விசாரித்த தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User