ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

Mar 4, 2026 - 19:30
 0
ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் போரில், ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் சென்றபோது ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

கப்பல்
கப்பல்

தாக்குதலுக்கு உள்ளான போர்க் கப்பலிலில் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து, இலங்கை கடற்படையினர் உதவி செய்தனர். 180 கடற்படை வீரர்களுடன் சென்ற போர் கப்பலில் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் போர்க் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் கூடுதல் தகவல்களை வழங்கவில்லை. ஆனால், இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்திருக்கிறார். மத்தியக் கிழக்கு நாடுகளில் தொடங்கிய இந்தப் பதற்றம் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டிருப்பது உலக நாடுகள் மத்தியில் கூடுதல் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0