நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: 'ஒற்றுமையாக இருக்கிறோம்' - காங்கிரஸ்

Jun 07, 2026 - 17:01
0
நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: 'ஒற்றுமையாக இருக்கிறோம்' - காங்கிரஸ்

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது.

இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது. ஆனால், கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு திமுக என்றென்றும் குரல் கொடுக்கும் என்று திமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை நடக்க உள்ள கூட்டம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸின் தகவல் தொடர்புப் பொறுப்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

`இந்தியா’ கூட்டணி
`இந்தியா’ கூட்டணி

"நாளை, ஜூன் 8, 2026 திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் (Constitution Club) நடைபெறவிருக்கும் 'இண்டியா ஜன்பந்தன்' (INDIA janbandhan) கூட்டத்தில் பங்கேற்பதை 23 அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஒரு சில கட்சிகள் தங்களின் சொந்தக் காரணங்களால் இந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமையை வெளிப்படுத்தியுள்ளனர் - இருப்பினும், மோடி அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு தங்களது கடுமையான எதிர்ப்பை அவர்களும் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிப்பது, நாள்தோறும் அரசியலமைப்பைச் சீர்குலைப்பது, புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடுவது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிப்பது, தொடர் விலைவாசி உயர்வால் குடும்ப பட்ஜெட்டுகளைத் தலைகீழாக்குவது, லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆசைகளையும் சிதைப்பது, முதலீட்டுச் சூழலை முடக்குவது மற்றும் வெளியுறவுக் கொள்கையின் மூலம் நாட்டின் தேசிய நலனில் சமரசம் செய்துகொள்வது என மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டை அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தியாவைப் போலவே, 'இண்டியா ஜன்பந்தன்' கூட்டணியும் தனது பன்முகத்தன்மையோடு என்றும் ஒற்றுமையாகத் துடிப்புடன் நிற்கிறது".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User