"தேர்தல் பிரச்சார MOOD-ல் இருந்து அவர் வெளிய வரல.!”- முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்

Jun 02, 2026 - 18:31
0
"தேர்தல் பிரச்சார MOOD-ல் இருந்து அவர் வெளிய வரல.!”- முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இன்று (ஜூன்.2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சிக்குச் சென்றிருந்தார். அவர் இன்னும் தேர்தல் பிரசார Mood-ல் இருந்து வெளிவராத மாதிரி தோன்றுகிறது. அவர் அரசாங்க Mood-க்கு வர வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சர் ஆகிவிட்டார். மக்கள் அவருக்கு வாய்ப்பு அளித்திருகிறார்கள். அவர் பெண்களின் பாதுகாப்பிற்காக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நான் கோயம்பேடு வழியாகத் தான் வந்தேன். கோயம்பேட்டில் பட்டப்பகலில் கார் ஏற்றி ஒரு இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். பாரில் ஏற்பட்ட பிரச்னையால் கொல்லப்பட்டிருக்கிறார். இதனைச் சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது.

'6 மாதம் விமர்சிக்க மட்டோம் என்று சொன்னார்கள் ஆனால் 6 நாள்களிலியே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்' என்று முதல்வர் சொல்கிறார்.

எதிர்க்கட்சிகள் விமர்சிக்காமல் இருக்க முடியாது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் இன்னும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

வேறு கட்சியில் இருந்து ஆட்களை சேர்க்கின்ற கவனத்தை பெண்கள் பாதுகாப்பில் செலுத்த வேண்டும் என்பது எங்களது தாழ்மையான வேண்டுகோள்.

Black & White-ல் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்படி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மொத்தமாக Black-ஆக மாறிவிடப்போகிறது. அமைச்சர்களை அழைத்து நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User