Gold: தங்கம் விலை மீண்டும் ரூ.1.20 லட்சத்தை எப்போது தொடும்?

May 03, 2026 - 11:29
0
Gold: தங்கம் விலை மீண்டும் ரூ.1.20 லட்சத்தை எப்போது தொடும்?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை இறங்கு முகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் ஒரு பவுன் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.1.34 லட்சத்தைத் தொட்டது. ஆனால், அதன் பிறகு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. அவ்வப்போது சின்ன சின்ன ஏற்றங்களும் இருக்கத்தான் செய்தன.

ஆனால், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை இறங்கு முகம்தான்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 4,000 - 4,800 டாலர்களுக்குள் வர்த்தகம் ஆகிறது. மீண்டும் இது இப்போது 5,000 டாலர்களைத் தொடும் என்று இன்றைய Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

"ஈரான் போர் முடியும் வரை தங்கம் விலையில் இறங்குமுகம்தான்.

இந்தப் போர் முடிந்த உடன், தங்கத்திற்கு ஏற்படும் டிமாண்டைப் பொறுத்து, தங்கத்தின் பக்கம் மீண்டும் ஃபோக்கஸ் திரும்புவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆக, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலரைத் தொட வேண்டுமானால், ஈரான் போர் முடிய வேண்டும்.

ஈரான் போரும், உலக பொருளாதாரமும்

ஈரான் போரினால், கச்சா எண்ணெய் விலையில் மிகுந்த நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. போர் முடிந்த உடன்தான், கச்சா எண்ணெய்யின் சராசரி விலையைக் கணிக்க முடியும்.

கச்சா எண்ணெய்யின் சராசரி விலை தெரிய வரும்போது, உலக பொருளாதாரத்திற்கும், உலக நாடுகளில் பணவீக்கத்திலும் எவ்வளவு பாதிப்பு என்று தெரிய வரும்.

அதையொட்டி, தங்கம் விலை நாணயங்களின் மதிப்பை வைத்து கணக்கிடப்படுமா... வட்டி விகிதங்களை வைத்து கணக்கிடப்படுமா... அல்லது இரண்டையும் சேர்த்து கணக்கிடப்படுமா என்பது தெரிய வரும். அதை வைத்து தங்கத்தின் விலை நிர்ணயமாகும்.

தங்கம்
தங்கம்

தங்கத்தின் மீது கவனம்

பொதுவாக, பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதம் குறைக்கப்படாது. அதனால், மீண்டும் தங்கம் பணவீக்க ஹெட்ஜாக மாறும். அப்போது மீண்டும் தங்கத்தின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பும்.

இப்போது உடனடியாக இது உருவாகாது... ஈரான் போர் முடிந்து, பணவீக்கத்தைப் பொறுத்து இது அனைத்தும் அமையும்" என்று கூறினார்.

தலைப்பிற்கான பதில் இதோ...

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களைத் தாண்டும்போது, இங்கே சென்னையில் ஒரு பவுன் தங்கம் கிட்டத்தட்ட ரூ.1.20 லட்சத்தைத் தொடும்.

ஆக, ஈரான் போர் முடிந்தால்தான், அனைத்தும் தெரிய வரும்.

'எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துப்பான்' என்பதுபோல, ஈரான் போர் முடியும் போது, அனைத்தும் தெரிந்துவிடும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User