பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

Sep 16, 2026 - 10:30
0
பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும்  தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கைக்கு செல்ல திட்டமிட்ட  சிறுவன் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை படகோட்டியிடம் கொடுத்து கள்ளதனமாக இங்கிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார்.

படகில் இலங்கைக்கு சென்று சிறுவனை, மன்னார் தம்மன்னா கடற்படை முகாமிற்குட்பட்ட ஆதாமின் பாலம் பகுதியில் உள்ள 6-வது மணல் திட்டில் தனியாக இறக்கிவிட்டு, படகோட்டி மீண்டும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகத் கூறப்படுகிறது.

வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மணல் திட்டில் தனியாக நின்றிருந்த சிறுவனை கண்டு சந்தேகமடைந்து அவரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திக்கும் போது, குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன்

மேலும், உரிய ஆவணங்கள் மற்றும் சட்டபூர்வமான நடைமுறைகள் இன்றி கடல் வழியாக எல்லை தாண்டி பயணம் செய்வது ஆபத்தானது என்பதால், இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User