Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக்

Mar 22, 2026 - 15:32
 0
Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக்

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

டோல் கேட்டில் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், உங்கள் ஃபாஸ்ட் டேகில் போதிய பேலன்ஸ் இல்லை... அல்லது பேலன்ஸே இல்லை.

இதனால், உங்களுக்கு ஒரு பிரச்னையும் ஏற்படாது. தாராளமாக அந்த டோல் கேட்டைக் கடந்து கொள்ளலாம்.

நீங்கள் இங்கே கட்டாமல் சென்ற தொகையின் பெயர், 'Unpaid User Fee'.

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலை

ஆனால், இதன் பின் சின்ன பிராசஸ் உள்ளது. அதில் மட்டும் அதிக கவனம் தேவை.

போதிய பேலன்ஸ் இல்லாமல், நீங்கள் டோலில் கட்டாமல் போன தொகையை செலுத்தக் கூறி தேசிய நெடுஞ்சாலைத் துறை உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும். இந்த மெசேஜின் பெயர் 'இ-நோட்டீஸ்'.

இந்த நோட்டீஸில் கட்டாமல் போன தொகை, வாகனத்தின் தகவல்கள் முதல் வலைதளத்தின் லிங்க் வரை அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஃபீஸை இ-நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் கட்டிவிட வேண்டும். அதை தாண்டினால், ஃபீஸ் இரண்டு மடங்கு அதிகமாக கட்ட வேண்டியதாக இருக்கும்.

ஃபாஸ்ட் டேக்கில் பேலன்ஸ் இல்லையென்றாலும், டோல் கேட்டைக் கடக்கலாம் என்பதெல்லாம் சூப்பர் தான்.

ஆனால், கொஞ்சம் மிஸ்ஸானாலும், இரண்டு மடங்கு அதிக தொகையைக் கட்ட வேண்டியதாக இருக்கும்.

இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க போதுமான பேலன்ஸை ஃபாஸ்ட் டேக்கில் எப்போதும் வைத்துக்கொள்வது நல்லது.

இந்த நடைமுறை கடந்த 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது மக்களே.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0