"திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை" - வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ராஜினாமா

May 12, 2026 - 15:02
0
"திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை" - வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ராஜினாமா

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காங்கிரஸ் கட்சியில் பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணவேணி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக (District Councillor) 8-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராகவும் (District Panchayat Deputy Chairman) தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணவேணி.

காங்கிரஸ் கிருஷ்ணவேணி
காங்கிரஸ் கிருஷ்ணவேணி

இந்த நிலையில், தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி த.வெ.க ஆட்சியமைக்க காங்கிரஸ் கைகொடுத்ததால், தி.மு.க ஆதரவில் தனக்குக் கிடைத்த மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் கிருஷ்ணவேணி.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

''த.வெ.க-வுடன் நாங்கள் இணைந்ததால், தி.மு.க ஆதரவில் கிடைத்த பதவியில் தொடர எனக்கு விருப்பமில்லை. எனவேதான் என்னுடைய பதவியை மனப்பூர்வமாக முன் வந்து ராஜினாமா செய்கிறேன்'' என்கிறார் கிருஷ்ணவேணி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User