முதல்வர் விஜய்: முதல் சட்டமன்றக் கூட்டம்... எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி! |TN News Live Update
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற புதிய பிரிவை உருவாக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், பாதுகாப்பை பலப்படுத்துதல், பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.
17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இது தொடர்பாக முதன்மை செயலாளர் சீனுவாசன் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே11-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரவை உறுப்பினர்களாக பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மேலும், பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நாளை (மே 12) காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)