`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

Jul 14, 2026 - 19:32
0
`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில்  பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்படக்கூடியவர். இதற்காகவே அவர் கடந்த 21 ஆண்டு பணியில் 25 முறை இடமாறுதல் பெற்று இருக்கிறார். தற்போது மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் நர்ஹரி ஸிர்வால் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறார்.

அமைச்சர் நர்ஹரியும் சர்ச்சையில் சிக்கியவர். எனவே அவர் மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிருப்தியில் இருந்தார். எனவே சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற துகாராம் முண்டேயை நர்ஹரியின் கீழ் பணிபுரிய அனுப்பி இருக்கிறாார். முன்னதாக புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனராக துகாராம் முண்டே நியமிக்கப்பட்டார். அதற்கு பா.ஜ.க அமைச்சர் கிரிஷ் மகாஜன் கடும் எதிர்ப் பு தெரிவித்தார்.

உடனே அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இப்போது அவர் அமைச்சர் நர்ஹரியின் கீழ் வந்து இருக்கிறார். இப்பதவிக்கு வந்ததில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் உணவகங்கள் மற்றும் மருந்து கம்பெனிகள் அச்சத்தில் உள்ளன. மும்பையில் மிகவும் பிரபலமான ஒரு ஐஸ் கிரீம் கடை சுகாதாரம் இல்லாமல் செயல்படுவதாக கூறி அதனை மூட உத்தரவிட்டுள்ளார். துக்காராம் முண்டே எப்டிஏ (FDA) ஆணையராகப் பொறுப்பேற்ற மே 25 அன்றே இந்த விரிவான அதிரடி சோதனை தொடங்கப்பட்டது.

பால் உற்பத்தி நிலையங்கள், போக்குவரத்து வாகனங்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என பால் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு பகுதியையும் நேரடியாகக் குறிவைத்து, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக்குமாறு அவரது தலைமையிலான எப்டிஏ உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து துகாராம் முண்டே அளித்த பேட்டியில், ''பால் என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான குழந்தைகள், தாய்மார்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்களின் முக்கிய ஊட்டச்சத்துக்கான அடிப்படை அடித்தளம் ஆகும். பாலில் கலப்படம் செய்வது என்பது பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதற்குச் சமம். இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் மகாராஷ்டிராவில் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தீவிர சோதனையைத் தொடர்ந்து சந்தைக்கு வரும் பால் மற்றும் பன்னீரின் விநியோக அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

சந்தையில் ரசாயனங்கள் மற்றும் யூரியா கொண்டு தயாரிக்கப்பட்டு வந்த செயற்கை பால் மற்றும் போலி பன்னீர் விநியோகம் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது எங்கள் நடவடிக்கை தொடரும். மக்களும் விதிமுறைகளைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் சுகாதாரத் தரங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்" என்று முண்டே கூறினார்.''

எப்டிஏ அதிகாரிகளின் சோதனையில் மாட்டிவிடக் கூடாது என்ற பயத்தில், கலப்படக் கும்பல்கள் பாலை சாக்கடையில் கொட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User