'எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ஏன்னா.!'- தொடரைவிட்டு வெளியேறியது குறித்து கலங்கிய சூர்யகுமார்

May 11, 2026 - 12:02
0
'எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ஏன்னா.!'- தொடரைவிட்டு வெளியேறியது  குறித்து கலங்கிய சூர்யகுமார்

நேற்று ( மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின.

இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

mi vs rcb
mi vs rcb

பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால், 2026 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த சீசனில் மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளை மும்பை அணி சந்தித்திருக்கிறது.

இந்நிலையில் மும்பை அணியின் இந்தத் தோல்வி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், "இப்படி ஒரு நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இருப்பதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது ஒரு கசப்பான உண்மை.

நாங்கள் எப்போதும் வெற்றியையே பார்த்த அணி, இப்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்தது தாங்க முடியாத வலியாக இருக்கிறது. நாங்கள் இந்த விளையாட்டை நேசிப்பதாலேயே விளையாடுகிறோம்.

mi vs rcb match
mi vs rcb match

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களின் சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க முயற்சி செய்தோம். இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்வது சற்று கடினம் தான்.

ஆனாலும், இந்த சீசனில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அடுத்த ஆண்டு இன்னும் வலிமையாகத் திரும்பி வருவோம்" என்று கலங்கியபடி பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User