டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

Jun 12, 2026 - 11:02
0
டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

வேலூர் கோட்டை வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை வடக்கு காவல் நிலையப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதில்சுவர் நடைபாதை பகுதியில் `டி.எஸ்.பி சீருடை’யில் பெண் ஒருவர் பிறந்த நாள் கேக்குடன் அமர்ந்திருந்தார். காலில் அவர் ஷூ அணியாமல், செருப்பு போட்டிருந்ததால் ரோந்து போலீஸாருக்கு பெண்ணின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரின் அருகில்சென்ற போலீஸார், `மேடம் நீங்க டி.எஸ்.பி-யா? இந்த மாவட்டத்துல உங்களைப் பார்த்ததே இல்லையே. யார் நீங்க? எந்த ஊர்? இங்கே ஏன் வெயிட் பண்றீங்க?’ என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலி டி.எஸ்.பி உமா மகேஸ்வரி

அதில், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகேயுள்ள நேமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (33) என்பதும், திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள் எனவும் தெரியவந்தது. 10-ம் வகுப்பு வரை படித்திருக்கும் உமா மகேஸ்வரி, சில மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துவந்திருக்கிறார். அந்த வீட்டில் 22 பவுன் நகை திருட்டு வழக்கில் கைதாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சென்னை பூக்கடை பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டிலும் ரூ.15 ஆயிரம் பணம் திருடியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, சொந்த ஊருக்குத் திரும்பிய உமா மகேஸ்வரிக்கு மேல்அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். நேற்று முன்தினம் அவருக்குப் பிறந்த நாள் என்பதால், அவரை `இம்ப்ரஸ்’ செய்வதற்காக டி.எஸ்.பி சீருடை அணிந்து வந்திருக்கிறார். ஆண் நண்பர் வர தாமதமானதால், போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், போலி டி.எஸ்.பி உமா மகேஸ்வரியை கைது செய்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User