நூறு சாமி: "சென்னையை விட்டு போயிருவேன்; இடம் தேடிட்டிருக்கேன்" - என்ன சொல்கிறார் விஜய் ஆண்டனி?

Jun 06, 2026 - 11:01
0
நூறு சாமி: "சென்னையை விட்டு போயிருவேன்; இடம் தேடிட்டிருக்கேன்" - என்ன சொல்கிறார் விஜய் ஆண்டனி?

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நூறு சாமி'.

இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன்.5) நடைபெற்றது.

நூறு சாமி
நூறு சாமி

இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனியிடம், ''இந்தப் படத்தில் விவசாயியாக நடித்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?" என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கைதான். தொழில் காரணமாகத்தான் சென்னையில் இருக்கிறேன்.

ஸ்ரீதர் வேம்பு சார் (சோகோ நிறுவன தலைவர்) எப்படி தென்காசியில் போய் செட்டில் ஆனாரோ அதே மாதிரி நானும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பொள்ளாச்சி மாதிரியான இடங்களில் செட்டில் ஆகிவிடுவேன்.

உண்மையிலேயே அதற்காக இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். கள்ளக்குறிஞ்சியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரொம்ப நன்றாக இருந்தது.

 விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

கிராமத்து வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன். கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்திற்கு வரலாம், அங்கு மால் இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள் இங்கு ஒன்றுமே இல்லை.

கிராமத்தில்தான் நல்ல காற்று, மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். அங்கு பரபரப்பு இருக்காது. கிராமத்து மக்கள் வாழக்கூடிய ஒரு வாழ்க்கை நல்ல வாழ்க்கை" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User